உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

கூரைவீடுகளே இல்லாத மாநிலமாக மாறப்போகிறது: எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் பேச்சு

நெல்லிக்குப்பம் : 

            நெல்லிக்குப்பம் நகராட்சி வைடப்பாக்கத்தில் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடந்தது.

              கவுன்சிலர் சித்ரா, ரவிராஜன் தலைமை தாங்கினர். தாசில்தார் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். 307 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் வழங்கினார். மேலும், வீட்டு மனைப்பட்டா வழங்கி மரக்கன்றுகள் நட்டார். கல்விக்குழு மூலம் வழங்கிய 5,000 ரூபாய் நிதியை துவக்கப் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார். சேர்மன் கெய்க்வாட் பாபு, துணைத் தலைவர் புகழேந்தி, வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன், கவுன்சிலர்கள் தமிழ்மாறன், விஜயகுமார், அசல்அலி, தி.மு.க., பழனிவேல், அங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசுகையில்,

               தமிழகத்தில் மட்டுமே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழைக்களுக்காக பல நல்ல திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தி வருகிறார். கூரை வீடுகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற போகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஒருநாளில் மட்டும் ஆயிரம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளோம். விரைவில் நகராட்சி பகுதியில் இலவச "டிவி' வழங்கப்படும். இதுபோன்ற நல்ல திட்டங்கள் தொடர முதல்வர் கருணாநிதியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்' என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior