உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

கடலூரில் ஆட்டோ ஓட்டுனர்கள் திடீர் "ஸ்டிரைக்': பயணிகள் பாதிப்பு

கடலூர் : 

            கடலூரில் இயங்கிவரும் டீசல் ஆட்டோக்களை பஸ் நிலையம் அருகே நிறுத்த அனுமதி கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் நேற்று திடீர் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

             கடலூரில் நேற்று காலை 9 மணியளவில் டீசல் ஆட்டோ ஓட்டுனர்கள் பஸ் நிலையத்தில் ஆட்டோவை நிறுத்த அனுமதிக்கக் கோரி திடீர் "ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். முன் அறிவிப்பின்றி கலெக்டர் அலுவலகம் செல்லும் சிக்னல் அருகே ஆட்டோ டிரைவர்கள் சிலர் நின்றுகொண்டு அந்த வழியாக வந்த ஆட் டோக் களை நிறுத்தி, பயணிகளை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோவை சாலையோரத்தில் நிறுத்தி வேலை நிறுத்தம் செய்தனர்.

           பின்னர் ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரை சந்தித்து கடலூர் பஸ் ஸ்டாண்டில் பெட்ரோல் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி டிக்கெட் ஏற்ற அனுமதிக்கப்படுகின்றனர். அது போல் டீசல் ஆட் டோக்களையும் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு கொடுத்தனர்.

பயணிகள் பாதிப்பு: 

              ஆட்டோ ஓட்டுனர்கள் முன் அறிவிப்பின்றி நேற்று காலை 9 மணியளவில் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பயணிகளை பாதியில் இறக்கிவிட்டனர். இதனால் பணிக்கு செல்வோர் பெரிதும் பாதிக் கப்பட்டனர். ஆட்டோக்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது தெரிந்தும் கூட போலீசார் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior