உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

திட்டக்குடி அருகே இடைச்செருவாய் ஏரி தூர்வாரும் பணி தீவிரம்

திட்டக்குடி : 

             திட்டக்குடி அருகே வனவிலங்குகள் குடிநீருக்காக வந்து செல்லும் ஏரியினை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.

              திட்டக்குடி அடுத்த நாங்கூர், கிருஷ்ணாபுரம் வனப் பகுதிகளிலிருந்து குடிநீருக்காக மான்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடைச்செருவாய் ஏரிக்கு வருவது வழக்கம். ஏரி மற்றும் நீர்வரத்து வாய்க்கால் நீண்ட காலமாக சீரமைக் கப்படாமல் இருந்தது. இதனால் மான்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை இருந்தது. இதற்கிடையே ஏரி மற்றும் நீர் வரத்து வாய்க்காலை சீரமைக்க 5 லட்சம் ரூபாய் நிதி ஒது க்கீடு செய்யப்பட்டது.

               இதனையடுத்து ஏரியை தூர் வாரும் பணி துரிதமாக நடந்து வருகிறது. நேற்று காலை 19 ஆண்கள், 134 பெண்கள் உட்பட 153 பேர் ஊராட்சி மக்கள் நலப்பணியாளர் அன்பழகன் முன்னிலையில் சீரமைக் கும் பணியில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் ஜெயமணி, துணைத் தலைவர் செல்வகுமார், கொளஞ்சி ஆகியோர் பணியினை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior