உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

விரிவுரையாளர்களை நியமிக்கக் கோரி பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் "ஸ்டிரைக்'

கடலூர் : 

            கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் இரண்டாவது ஷிப்ட் வகுப்பு துவங்கக் கோரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து "ஸ்டிரைக்' செய்தனர்.

             கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதனால் கல்லூரியில் காலை ஒரு ஷிப்ட் வகுப்புகளும், மாலையில் 2 மணி முதல் இரண்டாவது ஷிப்ட் வகுப்பு என நடத்தி வருகின்றனர். இதில் பெரும் பான்மையான விரிவுரையாளர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

                இந்தாண்டு வகுப்பு துவங்கியும் தற்காலிக விரிவுரையாளர்களை முறையாக நியமிக்காததால் நிரந்தரப் பணியில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் முதல் ஷிப்ட் பணியில் ஈடுபடுகின்றனர். இரண்டாவது ஷிப்ட்டில் தற்காலிக விரிவுரையாளர்கள் வகுப்புகள் எடுப்பது வழக்கம். அவர்களை இதுவரை நியமிக்காமல் இருப்பதால் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் வராமல் உள்ளனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. 

               கல்லூரி மாணவ, மாணவிகள் 2 ஆயிரம் பேர் நேற்று கல்லூரியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி தேவனாம்பட்டினத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior