உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

கிராமப் பகுதியில் குறைகளை கேட்டறிந்தார் நெல்லிக்குப்பம் எம்எல்ஏ

பண்ருட்டி:

           நெல்லிக்குப்பம் தொகுதியில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் பொதுமக்களிடம் இருந்து குறைகள் குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.

              நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உள்பட்ட எய்தனூர், கீழ்அருங்குணம், பல்லவராயநத்தம், நத்தம், சுந்தரவாண்டி ஆகிய கிராமப் பகுதியில் மக்கள் குறை சார்ந்த மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ சபா.இராஜேந்திரன், நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்திக்கு இலவச மனைப்பட்டா வழங்கினார். 5 பஞ்சாயத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபா.இராஜேந்திரன் கூறினார்.

                 ஊராட்சி மன்றத்தலைவி சுந்தரி தலைமையில் நடைபெற்ற விழாவில், பண்ருட்டி வட்டாட்சியர்  பி.பன்னீர்செல்வம், அண்ணாகிராம ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகர், தமிழரசி, திமுக முன்னாள் ஒன்றியச் செயலர் பலராமன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior