உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

சிதம்பரத்தில் பணிகள் நிறைவேற்றப்படவில்லை:தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

சிதம்பரம்:

              சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானப் பணிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் சேர்மன் பவுஜியாபேகம் தலைமையில் நடந்தது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1வது வார்டு உறுப்பினர் தியாகராஜனை சேர்மன், உறுப்பினர்கள் வரவேற்றனர்.

தி.மு.க., உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன்:

            கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்படி எந்த பணியும் நடக்கவில்லை. மேலும் நகரில் குடிநீர் தட்டுப்பாடு, நாய்,குரங்கு தொல்லை அதிகரித்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தி.மு,க., கூட்டணி கட்சிகளான காங்., வி.சி., உறுப்பினர்களுடன் சுயேச்சை உறுப்பினர்கள் சேர்ந்து வெளி நடப்பு செய்கிறோம் என வெளி நடப்பு செய்தனர்.அரங்கில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் மட்டும் இருந்ததால் கூட்டத்தை சேர்மன் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தார். ஆணையாளர் பொறுப்பு மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior