உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

அண்ணாமலைப் பல்கலையில்பன்னாட்டு கருத்தரங்கம்

சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
  
            சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை மற்றும் தொலைதூரக் கல்வி இயக்க மேலாண்மை பிரிவு சார்பில் நிலையான வளர்ச்சிக்கான மேலாண்மை நடைமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. துணைவேந்தர் ராமநாதன் குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் பிரகதீஸ்வரன் வரவேற்றார்.

               புதுச்சேரி பிரெஞ்ச் மையத்தின் இயக்குனர் மாரிமுத்து வேலாயுதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துறைத் தலைவர் பேராசிரியர் பஞ்சநதம் தலைமை உரை நிகழ்த்தினார். தொலைதூரக் கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ் மற்றும் இலங்கை ஈஸ்டன் பல்கலைக்கழக கனகசிங்கம், பல்கலைக்கழக யோகா மைய இயக்குனர் விஸ்வநாதன், பன் னாட்டு மேலாண்மை பயிற்சியாளர் விஷ்ணுகுமார் உள்ளிட்டோர் பேசினர். இலங்கை, இந்தோனேஷியா, ஈரான் உள் ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 500 பேர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior