உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

கடலூரில் தீ விபத்து:மூன்று வீடுகள் சேதம்

கடலூர்:

             கடலூரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

                 கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம். இவரது வீட்டையொட்டி உள்ள கூரை கொட்டகை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று வீசியதால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.அதில் அலாவுதீன் பாபுலான், முரளி ஆகியோரது கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்து குறித்து ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior