உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

ஸ்ரீமுஷ்ணம் பள்ளியில் எரிசக்தி விழிப்புணர்வு ஊர்வலம்


ஸ்ரீமுஷ்ணம்:

            ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ.,மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் சார்பில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி விழிப்புணர்வு மற்றும் வாகன பிரசார ஊர்வலம் நடந்தது.

             முன்னதாக எரிசக்தி குறித்த விளக்க கூட்டம் நடந்தது. செயலர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஞானசேகரன் வரவேற்றார். புதுப் பிக்கவல்ல எரிசக்தி பயன்பாடு மற்றும் பயன் படுத்தும் விதம் குறித்து தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை விரி வாக்க மேலாளர் வெங்கட்ராமன் விளக்க உரையாற்றினார். பின்னர் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior