உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

குறைகேட்புக் கூட்டத்தை அதிகாரிகள்புறக்கணிப்பதாக விவசாயிகள் புகார்

சிறுபாக்கம்:

            மங்களூர் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

                மங்களூர் ஒன்றிய விவசாயிகளின் குறைகேட்புக் கூட்டம், ஒன்றிய வளாகத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மார்கெட்டிங் பிரிவு அலுவலர் சிவக்குமார், தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு மானாவாரி நிலங்களுக்கு தேவையான மக்காச்சோள விதைகள், வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்குழாய் கிணறு, மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களுக்கு உரங்கள், பயிர்களை நாசம் செய்யும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதில் அளித்து உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் பேசுகையில், 

               "இது குறித்து சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப் படும்' என்றார்.தொடர்ந்து விவசாயிகள், கடந்த ஆண்டு நவம் பர் முதல் நடைபெறும் குறைகேட்புக் கூட்டத் திற்கு மின்துறை, ஊரக வளர்ச்சி, பொதுப்பணித் துறை, வருவாய் மற்றும் வனத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் வருவதில்லை. தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.இதனால் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் தெரிவிக்க முடிவதில்லை என அனைத்து விவசாயிகளும் புகார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior