உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 19, 2010

பண்ருட்டியில் கருப்பு கலரில் குடிநீர் பண்ருட்டியில் மக்கள் அவதி

பண்ருட்டி : 

             பண்ருட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் இரும்புத் துகள்கள் கலந்து கழிவுநீர் போல் வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பண்ருட்டி நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள 28வது வார்டு பஞ்சவர்ணம் நகர். இங்குள்ள ஆறு தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகராட்சி அலுவலகத்தையொட்டியுள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

               இந்த குடிநீர்த் தொட்டி சமீப காலமாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கடந்த நான்கு நாட்களாக குடிநீரில் இரும்புத் துகள் கலந்து கருப்பு கலரில் கழிவு நீர் போல் வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இரும்பு குழாய் என்பதால் அதன் துகள்கள் தண்ணீரில் கலந்து வருவதாக கூறப்படுகிறது. உடன் அதிகாரிகள் பழைய துருப்பிடித்த இரும்புக் குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior