உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 19, 2010

இன்று உலக புகைப்பட தினம


        
           முதல் புகைப்படம் பதிவு செய்யப்பட்டு 196 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. 
 
          பாக்ஸ் வடிவில் கண்டுபிடிக்கப்பட்ட கேமரா, தற்போது டிஜிட்டலுக்கு மாறியிருக்கிறது. இதில், புகைப்படச்சுருள் பயன்படுத்திய கேமராக்கள் இன்று ஏறக்குறைய முற்றிலும் பயன்பாட்டிலிருந்து மறைந்துவிட்டன. சிறிய வகை டிஜிட்டல் கேமரா முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்தும் கேமராக்கள் வரை எத்தனையோ வகை.  புகைப்படம் எடுப்பது என்பது இன்றைய சூழலில் மிகச் சாதாரணமாக மாறிவிட்டிருக்கிறது. 
 
                புகைப்படம் எடுப்பதே அரிதான செயலாக இருந்த காலம் மாறி, அனைவருமே இன்றைக்கு எளிதில் பயன்படுத்தும் தொழில்நுட்பமாக மாறியிருக்கிறது. முந்தைய கேமராக்களில் கை அசைவுகள் கூட, படத்தின் பதிவைக் குலைத்துவிடும். ஆனால் இன்று, கேமரா லென்ஸ் தொழில்நுட்பம் காரணமாக மிகக் குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல படத்தைப் பதிவு செய்ய முடியும்.  முன்பு 6 அடி தொலைவுக்கு அப்பால் படம் எடுத்தால், படம் சரியாகப் பதிவாகாது. இன்றைக்கு "தொலைவு' என்பதே தொலைந்துபோனது.  வயது முதிர்ந்த, கை நடுங்கும் மூதாட்டி கூட தங்களது பேரக் குழந்தைகளை இன்றைய கேமராவில் பதிவு செய்ய முடியும். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior