உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 19, 2010

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் துவங்கியது

கடலூர்  : 

             பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது.

                மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் துவக்கி வைத் தார். 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு கபடி, கைப்பந்து, கையுந்து பந்து, இறகுப் பந்து, கோ-கோ, செஸ், வளைய பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் 40 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கடலூர் முதுநகர் அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன், உடற் கல்வி இயக்குனர் முருகேசன், உடற் கல்வி ஆசிரியர் வசந்தி ஆகியோர் செய்திருந்தனர். போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் கடலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட் டிகளில் பங்கேற்பர். இன்று (19ம் தேதி) 14 -19 வயதிற்குட்பட்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior