உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 19, 2010

நெய்வேலியில் பத்திரிகை ஆசிரியர் தாக்கு: போலீசார் வழக்கு பதிவு

நெய்வேலி: 

             நெய்வேலியில் பத்திரிகை ஆசிரியரின் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கித் தாக்க முயன்ற கும்பலை, டவுன்ஷிப் போலீசார் தேடி வருகின்றனர். 

                வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட வேலுடையான்பட்டைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர், "அரசியல் ஒற்றன்' என்ற மாத இதழின் பொறுப்பு ஆசிரியராக உள்ளார். இவருக்கும் இவரது வீட்டின் உரிமையாளர் சரோஜாவுக்கும் முன்விரோதம் உள்ளது. இது தொடர்பாக வழக்கும் உள்ளது. இந்நிலையில் செந்தில்குமார், டவுன்ஷிப் போலீசில், சரோஜாவின் கணவர் மணிமாறன் மற்றும் லட்சுமணன், கார்த்திக், மீனா மற்றும் சிலர் வீட்டிற்குள் புகுந்து  இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி பாக்கெட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு இரும்பு பைப் மற்றும் கத்தியால் தாக்க முற்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து தான் தப்பி வந்து விட்டதாகவும் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior