உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 19, 2010

ஊதிய உயர்வு அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் பேட்டி

கடலூர் : 

              டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் அறிவிப்பு திருப்தி அளிக்கவில்லை என அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.

இதுகுறித்து அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: 

                  காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் பல போராட்டங்கள் நடத்தினர். இறுதியாக கடந்த 11ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒடுக்க நிர்வாகம் கவனம் செலுத்தியதால் நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும் இடையே கசப்புணர்வு மேலோங்கியுள்ளது. 

              இந்நிலையில் முதல்வர் கருணாநிதி. டாஸ்மாக் மேர்பார்வையாளர்களுக்கு 500, விற்பனையாளர்களுக்கு 400, பார் உதவியாளர்ளுக்கு 300 ரூபாய் ஊதிய உயர்வும், ஊக்கத் தொகை 1.5 சதவீதம் என்பதை 1.75 சதவீதமாகவும், வைப்பு தொகைக் கான வட்டியை 3.5 சதவீதம் என் பதை 6 சதவீதமாக உயர்த்தி வழங் கப்படும் எனவும், காலி அட்டை பெட்டிகளின் உள் கழிவுத் தொகையை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.

                 முதல்வரின் இந்த அறிவிப்பு டாஸ்மாக் பணியாளர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. காலமுறை ஊதியம் கேட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்கு சொற்ப அளவில் ஊதிய உயர்வு அளித்தது நியாயமல்ல. பணி நிரந்தரம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற் றமளிக்கிறது. ஊக்கத் தொகை வழங்குவதில் பின்பற்றப்படும் முறையை மாற்றி மொத்த வசூல் தொகைக்கு வழங்க மறுபரிசீலனை செய்ய வேண்டும். வைப்பு நிதிக்கான வட்டியை 8.5 சதவீதம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை டாஸ்மாக் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior