உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 19, 2010

குறிஞ்சிப்பாடியில் ஓடும் பஸ்சிலிருந்து இறங்கிய மாணவர் தவறி விழுந்து பலி

குறிஞ்சிப்பாடி : 

 
              ஓடும் பஸ்சிலிருந்து இறங்க முயன்ற மாணவர் தவறி விழுந்து உடல் நசுங்கி இறந்தார். வடலூர் அடுத்த ராசாக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் தவமணி (16). 

                     குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக உள்மருவாய் செல்லும் அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். ராசாக்குப்பத்தில் தனது வீட்டின் அருகே பஸ் சென்ற போது, தவமணி ஓடும் பஸ்சின் முன் படிக்கட்டிலிருந்து இறங்க முயன்ற போது தவறி கீழே விழுந்தார். இதில் தவமணி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. அதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior