உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 22, 2010

வடலூர் எஸ்.டி. ஈடன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

குறிஞ்சிப்பாடி : 

               வடலூர் எஸ்.டி. ஈடன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. எஸ்.டி. ஈடன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த  அறிவியல் கண்காட்சியை பெத்தநாயக்கன்குப்பம் எஸ்.ஐ.எல். நிறுவன மேலாளர் ரவிக்குமார் திறந்து வைத்தார். 

                பள்ளியில் 5 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல்வேறு அரங்கங் கள் அமைத்து இருந்தனர். இதில் பறக்கும் வானூர்தி, தொலைத் தொடர்பு சாதன மாதிரிகள், சோப்பால் செய்யப்பட்ட புத்தர், பிள்ளையார், ரோஜாப்பூக்கள், இடம் பெற்றிருந்தது. மேலும் சொட்டு நீர் பாசனம், ஓசோன் எவ் வாறு மாசுபடுதல், அனல் மின் நிலைய மாதிரி, வெடிக்கும் எரிமலை என மாணவர்களின் அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. 

                கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்தப்பட்ட ஓவியப் போட்டி, கையெழுத்து போட்டி, கட்டுரை போட்டி, புதுக்கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு பள்ளி முதல்வர் தாமஸ் பரிசுகளை வழங்கி பாராட் டினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior