உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 22, 2010

பெண்ணையாற்றில் மணல் குவாரி பள்ளத்தில் மூழ்கி இரண்டு சிறுமியர் பலி

நெல்லிக்குப்பம் : 

            மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றில், மணல் எடுத்த பள்ளத்தில் சிக்கி இரண்டு சிறுமியர் பரிதாபமாக இறந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஜூனைத். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷரிஜ் பாத்திமா (14). அதே தெருவைச் சேர்ந்த ஜாகீர் உசேன் மகள் ஜீனத் பசிரியா (14).

                 இருவரும், கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால், இருவரது குடும்பத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மதிய உணவு எடுத்துக் கொண்டு மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றுக்குச் சென்று குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஷரிஜ் பாத்திமா, ஜீனத் பசிரியா இருவரும் மணல் எடுத்த பள்ளத்தில் சிக்கினர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்றுவதற்குள் சிறுமியர் இருவரும் இறந்தனர். இறந்த சிறுமியரின் பெற்றோர் வழக்கு வேண்டாமெனக் கூறி உடல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். ஒரே தெருவில் இரண்டு சிறுமியர் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                 கடந்த வாரம் ஆற்றின் தென்கரையில் ஒருவர், வடகரையில் இரண்டு பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். நேற்று இறந்த இரண்டு மாணவியரைச் சேர்த்து ஒரே வாரத்தில் அதே இடத்தில் ஐந்து பேர் ஆற்றில் மணல் எடுத்த பள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior