உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 22, 2010

சிதம்பரத்தில் குருப்பெயர்ச்சி மகா யாகம்


வீரபத்திரசாமி கோயில் தெரு ஆரோக்கிய வித்தியாலயாவில் நடைபெற்ற பொதுதீட்சிதர்கள் பங்கேற்ற குருப்பெயர்ச்சி யாகம்.
 
சிதம்பரம்:

            சிதம்பரம் வீரபத்திரசாமி கோயில் தெருவில் உள்ள ஆரோக்கிய வித்தியாலயா வளாகத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு மகா யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

              ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணிக்கு குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு செல்கிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீசுபஜாதகாலயா சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகாயாகம் நடைபெற்றது. உ.வே.வெங்கடேச தீட்சிதர் தலைமையில் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் பங்கேற்று யாகத்தை நடத்தினர்.

                 இந்நிகழ்ச்சியில் மௌன மடாதிபதி சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஜோதிடர் எஸ்.மோகன்பிள்ளை, அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லுரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், டி.கே.விஜய்காந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யாகம் முடிந்த பின்னர் நடைபெற்ற கூட்டுப் பிராத்தனை நிகழ்ச்சியில் பாதிப்படையும் ராசி மற்றும் நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று சங்கல்பம் செய்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior