உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 22, 2010

விருத்தாசலம் மணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் கரையோரத்தில் வசிப்போர் அச்சம்



விருத்தாசலம் : 

                விருத்தாசலம் மணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவ மழையால் கடந்த இரு தினங்களாக விருத்தாசலம் பகுதியில் இரவு, பகல் என தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் மழைநீர் மணிமுக்தா ஆற்றில் ஓடத் துவங்கியது.

                 இந்நிலையில், கோமுகி அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுவதால், விருத்தாசலம் மணிமுத்தாறு ஆற்றில் நேற்று காலை முதல், படிப்படியாக வெள்ளம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து பாலத்தை தொடும் அளவிற்கு ஓடினால் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior