உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

200 பேருக்கு இல​வச அக்​கு​பஞ்​சர்,​ ஆயுர்​வேத சிகிச்சை

கட ​லூர், ​நவ. 29:​

கட​லூ​ரில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்த இல​வச அக்​கு​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத சிகிச்சை முகா​மில் 200 பேருக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. ​ க​ட​லூர் அரிமா சங்​கம்,​ கவுன்​சில் ஆப் இந்​தி​யன் அக்​கு​பஞ்​ச​ரிஸ்ட்,​ கட​லூர் சுசான்லி அக்​குப்​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத மருத்​து​வ​மனை மற்​றும் டாபர் ஆயுர்​வே​திக் இந்​தியா நிறு​வ​னம் இணைந்து இந்த மருத்​துவ முகா​முக்கு ஏற்​பாடு செய்து இருந்​தன. நக​ராட்சி மேல்​நி​லைப் பள்ளி வளா​கத்​தில் இந்த முகாம் நடந்​தது. ​÷வ​லி​கள் மற்​றும் பெண்​க​ளுக்​கான மாத​வி​டாய் சம்​பந்​தப்​பட்ட நோய்​க​ளுக்​காக பிரத்​தி​யோ​க​மாக இந்த முகாம் நடத்​தப்​ப​ட​டது. ​ இதில் சுசான்லி மருத்​து​வ​மனை டாக்​டர்​கள் ஏ.ரவி,​ உஷா​ரவி ஆகி​யோர் தலை​மை​யில் அக்​கு​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத மருத்​து​வர்​கள் ​ டி.சுந்​தர்​ரா​ஜன்,​ என்.ராதா​கி​ருஷ்​ணன்,​ ஆர்.பானுப்​பி​ரியா,​ வி.பவ​தா​ரிணி,​ ஆர்.சக்​க​ர​வர்த்தி உள்​ளிட்ட மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​த​னர். இதில் 200 பேர் பயன் அடைந்​த​னர். ​மா​த​வி​டாய் சம்​பந்​தப்​பட்ட நோய்​க​ளுக்​காக பல பெண்​கள் சிகிச்சை பெற்​ற​தாக டாக்​டர் ஏ.ரவி தெரி​வித்​தார். ம​ருத்​துவ முகாம் தொடக்க விழா​வுக்கு,​ அரிமா சங்​கத் தலை​வர் ஏ.ஆர்.வேல​வன் தலைமை வகித்​தார். அக்​கு​பஞ்​சர் மருத்​து​வம் குறித்து டாக்​டர் உஷா​ரவி உரை நிகழ்த்​தி​னார். டாபர் நிறு​வன விற்​பனை அபி​வி​ருத்தி அலு​வ​லர் பாலாஜி,​ அரிமா சங்க நிர்​வா​கி​கள் ஆர்.பூபா​லன்,​ எஸ்.இஸ்​ரேல்,​ கே.திரு​மலை உள்​ளிட்​டோர் பேசி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior