உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

அரசு மதுக்​கடை பணி​யா​ளர்​கள் ஊர்​வ​லம்,​ ஆர்ப்​பாட்​டம்

கட ​லூர்,​ நவ. 29:​

தமிழ்​நாடு அரசு டாஸ்​மாக் பணி​யா​ளர்​கள் சங்​கத்​தி​னர் கட​லூ​ரில் ஞாயிற்​றுக்​கி​ழமை ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். ​ அ​ரசு மதுக்​க​டைப் பணி​யா​ளர்​களை நிரந்​த​ரம் செய்ய வேண்​டும். கல்​வித் தகு​திக்கு ஏற்ப மாற்​றுப் பணி வழங்க வேண்​டும். கால​முறை ஊதி​யம் வழங்க வேண்​டும். மது விற்​ப​னை​யில் 1 சதம் ஊக்​கத் தொகை வழங்க வேண்​டும். நீதி​மன்​றத் தீர்ப்​பின்​படி அனைத்​துப் பணி​யா​ளர்​க​ளுக்​கும் நிலு​வைத் தொகை வழங்க வேண்​டும். வார விடு​முறை மற்​றும் அரசு விடு​முறை வழங்க வேண்​டும். 8 மணி நேர வேலைத்​திட்​டத்தை அமுல்​ப​டுத்த வேண்​டும் என்​பவை உள்​ளிட்ட கோரிக்​கை​க​ளுக்​காக இந்த ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது. ஊர்​வ​லம் திருப்​பாப்பு​லி​யூர் உழ​வர் சந்தை அரு​கில் இருந்து புறப்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்தை அடைந்​தது. ஊர்​வ​லத்தை அர​சுப் பணி​யா​ளர் சங்க மாநில பொதுச் செய​லா​ளர் கோ.சீனு​வா​சன் தொடங்கி வைத்​தார். ​ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆர்.கார்த்​தி​கே​யன் தலைமை வகித்​தார். மாநில துணைத் தலை​வர் கே.சர​வ​ணன் முன்​னிலை வகித்​தார். மாவட்​டத் தலை​வர் கோவிந்​த​ரா​ஜன் வர​வேற்​றார். அரசு தொழில் நுட்​பப் பணி​யா​ளர் சங்க மாநி​லத் தலை​வர் சுந்​த​ர​ராஜா,​ அர​சுப் பணி​யா​ளர் சங்க மாவட்​டப் பொரு​ளா​ளர் ராஜா​மணி ஆகி​யோர் வாழ்த்​திப் பேசி​னர். அர​சுப் பணி​யா​ளர் சங்க மாவட்​டத் தலை​வர் பி.நல்​ல​தம்பி நிறைவு உரை நிகழ்த்​தி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior