உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

கடலூர், நவ. 29:

பள்ளிகளில் சேராமல் தனியாக படிக்கும் மாணவர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (1-12-2009) தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை கடலூர் மண்டல துணை இயக்குநர் தே.ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு 1-12-2009 தொடங்கி 5-12-2009 வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கீழபெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, கடலூர் மாவட்டத்தில் திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பாப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி ஆகியவை தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுககான நுழைவுச் சீட்டுகள் தேர்வர்களின் முகவரிக்கு அனுப்பட்டு உள்ளன. நுழைவுச் சீட்டுகள் கிடைக்காதவர்கள் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். அரசு தொழில் நுட்பத் தேர்வுகள் 2009 - விவசாயம், கைத்தறி நெசவு, மற்றும் அச்சுக்கலைப் பிரிவு முதலிய தேர்வுகள் 4-12-2009 முதல் 12-12-2009 வரை நடைபெற உள்ளன. இத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்து உள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்வு மைத்துக்குச் சென்று 30-11-2009 முதல் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior