உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி மின் இணைப்பு துண்டிப்பு

கடலூர், நவ.28:

கடலூரில் சனிக்கிழமை மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் தீப்பற்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடலூரில் இருந்து கண்டக்காடு செல்லும் வழியில் உப்பளவாடி அருகே உள்ள மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த எண்ணெய் கீழே கொட்டத் தொடங்கியது. கடலூர் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெருமாள் நகர், என்.ஜி.ஓ.நகர், அழகப்பா நகர், ஓம்சக்தி நகர், நேருநகர், குண்டுஉப்பளவாடி சின்ராஜ் நகர் உள்ளிட்ட 10 நகர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. டிரான்ஸ்ஃபார்மரைப் பழுது பார்ககும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior