உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

கடலூர் சீர்​தி​ருத்​த பள்​ளி​யிலிருந்து 4 சிறு​வர்​கள் தப்​பி​ ஓட்டம்

கட ​லூர்,​ நவ. 29:​

கட​லூர் அரசு சிறு​வர் சீர்​தி​ருத்​தப் பள்​ளி​யில் இருந்து இளம் குற்​ற​வா​ளி​க​ளான 4 சிறு​வர்​கள்,​ ஞாயிற்​றுக்​கி​ழமை தப்பி ஓடி​விட்​ட​னர். ​ க​ட​லூர் கடற்​க​ரைச் சாலை​யில் அரசு கூர்​நோக்கு இல்​லம் என்ற சிறு​வர் சீர்​தி​ருத்​தப் பள்ளி செயல்​பட்டு வரு​கி​றது. இதில் இளம் குற்​ற​வா​ளி​கள் அடைக்​கப்​பட்டு உள்​ள​னர். இவர்​க​ளில் 4 பேர் ஞாயிற்​றுக்​கி​ழமை தப்பி ஓடி​விட்​ட​னர். ​விக் ​கி​ர​வாண்​டி​யைச் சேர்ந்த ராஜா ​(16), வட​லூர் கருங்​கு​ழி​யைச் சேர்ந்த ரமேஷ் ​(15), கட​லூர் முது​ந​க​ரைச் சேர்ந்த விக்​னேஷ் ​(15), நாரா​ய​ணன் ​(15) ஆகிய அந்த 4 பேரும் பல்​வேறு குற்​றச் செயல்​க​ளில் ஈடு​பட்​ட​தற்​காக கூர்​நோக்கு இல்​லத்​தில் சேர்க்​கப்​பட்டு இருந்​த​னர். ​ ஞா​யிற்​றுக்​கி​ழமை காலை அவர்​கள் 4 பேரும் கூர்​நோக்கு இல்​லத்​தின் பின்​பக்​கச் சுவர் வழி​யாக ஏறிக்​கு​தித்து தப்பி விட்​ட​னர். இது​கு​றித்து கட​லூர் புது​ந​கர் போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து தப்பி ஓடிய சிறு​வர்​க​ளைத் தேடி வரு​கி​றார்​கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior