உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

ரூ. 20 கோடியில் வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு

கடலூர், நவ. 7:

திட்டக்குடி வட்டத்தில உள்ள வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை பார்வையிட்டார்.
25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்டது வெலிங்டன் ஏரி. இதன் கரை 300 மீட்டர் தூரத்துக்குத் தொடர்ந்து பூமிக்குள் புதைந்துக் கொண்டு இருப்பதால், ரூ. 20 கோடியில் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன.
இதனால் இந்த ஆண்டு ஏரியில் தண்ணீர் சேமிக்கப்படவில்லை. வெள்ளாற்றில் இருந்து ஏரிக்கு வரும் மதகு அடைக்கப்பட்டு உள்ளது.
ஏரிக்கு வரும் மழைநீர் முழுவதும் வாய்க்கால்களில் திறந்து விடப்படுகிறது.
ஏரிக்கு மழை நீர் திடீரென அதிக அளவில் வந்தால் ஏரியை அடுத்துள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சீதாராமன் ஏரியை சனிக்கிழமை பார்வையிட்டு அவர் கூறியது:
ஏரிக்கரை பலப்படுத்தும் பணி நடந்து வருவதால் 18 மாதங்கள் விவசாயிகளுக்கு ஏரி நீர் கிடைக்காது. எனவே இப் பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறுகளுக்கு மின் இணைப்பு உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஏரிக்கரை மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதற்கு ரூ. 40 லட்சம் தேவைப்படும்.
கரை பலப்படுத்தும் பணி நடந்து கொண்டு இருந்தாலும் ஏரியில் 15 அடி வரை (மொத்த உயரம் 39.4 அடி) தண்ணீர் தேக்க முடியும் என்று பொறியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். முருகன்குடி, திட்டக்குடி பாலங்கள் தலா ரூ. 8 கோடியில் கட்டப்படும் என்றார் ஆட்சியர். ஆட்சியருடன் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior