உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

கனமழையால் காய்கறி விலை உயர்வு

சிதம்பரம், நவ. 9:

சிதம்பரத்தில் தொடர்ந்து 4 நாள்களாக பெய்து வரும் கன மழையினால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கன மழையினால் சிதம்பரத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட நகர்களில் வெள்ள நீர் புகுந்தது. திங்கள்கிழமை காலை சற்று மழை நின்றதால் வெள்ளநீர் வடியத் தொடங்கியது. இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் முதல் மீண்டும் மழை தொடங்கியதால் மீண்டும் அப்பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.
சிதம்பரம் பகுதியில் திங்கள்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழை விவரம்: (மி.மீ.): சிதம்பரம் 44, புவனகிரி 41, சேத்தியாத்தோப்பு 102, பரங்கிப்பேட்டை 57, அண்ணாமலைநகர் 55.
காய்கறி விலை: தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சிதம்பரத்தில் காய்கறி விலை உயர்ந்துள்ளது. விலை விவரம் வருமாறு (பழைய விலை அடைப்புக்குறியில்). பெரிய வெங்காயம் கிலோ ரூ.24-ம் (ரூ.18), சிறய வெங்காயம் கிலோ ரூ.26-ம் (ரூ.20), தக்காளி கிலோ ரூ.28-ம் (ரூ.18), கேரட் கிலோ ரூ.30 (ரூ.20), பீன்ஸ் கிலோ ரூ.30-ம் (ரூ.20), முட்டகோஸ் கிலோ ரூ.18-ம் (ரூ.12), உருளைக்கிழங்கு கிலோ ரூ.28-ம் (ரூ.24), பச்சை மிளகாய் கிலோ ரூ.30-ம் (ரூ.20), பீட்ரூட் கிலோ ரூ.24-ம் (ரூ.12) விற்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior