உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

தொடர் மழையால் அசாதாரண நிலை இல்லை: ஆட்சியர்


கடலூர், நவ. 9:


கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அசாதாரண நிலை ஏற்படவில்லை. மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
வடகிழக்குப் பருவமழை முன்னேற்றம் அடைந்து உள்ளது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் 7287 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. 8-ம் தேதி காலை வரை ஒரு நாளில் மட்டும் 993.3 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. மழைகாலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் முன்னேற்பாடுகள் குறித்து, ஏற்கெனவே அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 57 கிராமங்கள் (வட்ட வாரியாக கடலூர் 21, சிதம்பரம் 12, காட்டுமன்னார்கோயில் 14, விருத்தாசலம் 5, பண்ருட்டி 3) பாதிப்புக்கு உள்ளாகும் கிராமங்களாகக் கண்டறியப்பட்டு உள்ளது. பாதிப்புகளைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்க அலுவலர்கள் கொண்ட ரோந்துப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுப்பணித்துறை ஏரிகள் 198, ஊராட்சி குளங்கள் 296, இரவு பகலாகக் கண்காணிக்கப்படுகிறது.
பாதிப்புகள் ஏற்படும்போது மக்கள் தங்குவதற்கு 20 மையங்கள் (கடலூர் வட்டத்தில் 8, சிதம்பரம் வட்டத்திóல 13) தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அப்பகுதியõல் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
திட்டக்குடி வட்டம் வெலிங்டன் ஏரிக்கரை 1 கி.மீ. நீளத்துக்கு சேதம் அடைந்ததால் ரூ. 20 கோடியில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும். எனவே நடப்பு ஆண்டில் தண்ணீர் சேமிக்கவில்லை. ஒரே நேரத்தில் பலத்த மழை பய்தால் 19 கிராமங்கள் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்தனர். ஏரியில் 15 அடி வரை இப்போதே தண்ணீர் சேமிக்க முடியும். 15 அடிக்கு மேல் தண்ணீரைச் சேமிக்கும் நிலை வராது. அதையும் மீறி தண்ணீர் வந்தால் எந்த இடத்தில் வெட்டி வெளியேற்றலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
வீராணம் ஏரியின் நீர் மட்டம் 44 அடியாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஏரிக்கு காவிரி நீர் நிறுத்தப்பட்டாலும் மழை காரணமாக ஏரிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. முழுவதும் வெளியேற்றப்படுகிறது. வெள்ளியங்கால் ஓடை வழியாக 250 கன அடியும், வெள்ளாற்றில் 2 ஆயிரம் கன அடியும் திறக்கப்பட்டு உள்ளது.
வீராணம் ஏரிக்கரையில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு 2 நாளில் சரி செய்யப்பட்டது.
237 கிராம நியாயவிலைக் கடைகளில் 818 டன் அரிசி கையிருப்பில் உள்ளது.
சுகாதார நிலையங்களில் 50 சதவீதம் கடுதலாக மருந்துகள் கையிருப்பு வைத்து இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கிராமச் சாலைகளைத் தாற்காலிகமாக பழுது பார்க்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
சம்பா நெல் நடவுப் பணிகள் 50 ஆயிரம் ஹெக்டேரில் நடந்து வருகிறது. 90 சதவீதம் நாற்று நடவு முடிந்து விட்டது. மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. மழைவிட்டதும் வடிந்து விடும். பயிர்களுக்குப் பாதிப்பு இல்லை. கிராமங்களில் குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தவும், குழாய்களைப் பழுதுபார்க்கவும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. என்.எல்.சி. சுரங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற, பொதுமக்கள் ஒத்தழைப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு 5.5 கி.மீ. தூரம் வாய்க்கால் வெட்டப்பட்டு விட்டது என்றார் ஆட்சியர்.
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் வெங்கடேசன், நீர்வளஆதார மைய செயற்பொறியாளர் ரஞ்சன், கூட்டுறவு இணைப் பதிவாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior