உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

வடவாறு பாசனப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது

கடலூர்,நவ.8:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் வடவாறு பாசனப் பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக 5 ஆயிரம் ஏக்கர் நெல்பயிர் ஞாயிற்றுக்கிழமை தண்ணீரில் மூழ்கியது.
வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வழங்கும் வடவாறு மூடப்பட்டாலும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்துவரும் கன மழையால் கருவாட்டு ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வடவாறில் வந்து கலக்கிறது. இதனால் வடவாறு நேரடிப் பாசனப் பகுதிகளான 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதில் திருமூலஸ்தானம், எடையார், ராதாமூர், மா.உடையூர், பிள்ளையார் தாங்கல், சர்வராஜன்பேட்டை, திருநாரையூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நட்டு 10 முதல் 20 நாள்கள் ஆன நெல்பயிர் தண்ணீரில் மூழ்கி விட்டதாக கீழணை விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
இந்த கிராமங்களில் இருந்து வெளியேறும் 10 ஆயிரம் கன அடி நீர், மணவாய்க்காலில் கலந்து, பழைய கொள்ளிடம் வழியாகக் கடலில் கலக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior