உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய பொதுமக்கள்


கடலூர், நவ.6:


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் பஸ் நிறுத்தங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.
நெல்லிக்குப்பத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் ஓராண்டுக்கு முன் திறக்கப்பட்டது. ஆனால் திறந்தது முதல் பஸ் நிலையத்துக்குள் எந்த பஸ்ஸýம் செல்லாமல் இருந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, அக்டோபர் 1-ம் தேதி முதல் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்துக்குள் சென்று வருகின்றன. எனினும் பஸ் நிலையத்துக்குள் செல்லும் சாலை போதிய அகலம் இல்லாததால், பஸ்கள் பிரதானச் சாலையில் இருந்து உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்போதும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நெல்லிக்குப்பம் பிரதானச் சாலையில், அஞ்சல் நிலைய பஸ் நிறுத்தம், கடைத் தெரு பஸ் நிறுத்தம் ஆகியவற்றை போலீஸôர் ரத்து செய்து விட்டனர். அந்த நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அஞ்சல் நிலைய பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் எம்.எல்.ஏ. அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். பஸ் நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவிட்டனர். எனவே வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புப் கொடி ஏற்றி அப்பகுதி மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளிலும் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன. அடுத்தக்கட்ட போராட்டமாக 9-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீஸôரிடம் அனுமதி கோரியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior