உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

விவசாய தொழிலாளர்களுக்கு வேலையில்லா படி வழங்கக் கோரிக்கை

சிதம்பரம்,நவ.9:

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு வேலையில்லா படி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக பெய்து வரும் தொடர் மழையியால் கிராமப் புறங்களில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனர். மத்திய அரசு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின்படி வேலையில்லா நாட்களில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பதிவு செய்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு நபர் ஒருவருக்கு பாதி சம்பளம் ரூ.40 வழங்க வேண்டும். மழையால் அவதியுறும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலையில்லா சம்பளத்தை வங்கிக் கணக்கிலோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior