உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

மந்தாரக்குப்பம் குடிசைப் பகுதிகளில் மழைநீர்

நெய்வேலி நவ. 9:

மந்தாரக்குப்பத்தில் தாழ்வான குடிசைப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி மந்தாரக்குப்பத்தை அடுத்த மேல்பாப்பனப்பட்டு மற்றும் மேல்பாதி ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி குடிசைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் அந்தந்த ஊர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
விருத்தாசலம் கோட்டாட்சியர் மீனாட்சி மழைநீர் புகுந்த கிராமங்களைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ரோட்டரி மற்றும் அரிமா சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை செய்துவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior