உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

வெள்ள நிவாரணப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்

கடலூர்,நவ.9:

கடலூர் மாவட்டத்திóல் வெள்ள நிவாரணப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.
அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு.திருமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் திங்கள்கிழமை ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனு:
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, சிதம்பரத்தில் வெள்ள நிவாரணத் தொகை, மற்றும் உதவிப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.
அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவாய் இன்றி தவிக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
மேலும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளைச் சீரமைக்க ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior