உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

மழை பாதிப்பு: ஆட்சியர் ஆய்வு

கடலூர்,நவ.9:

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கடலூர் அருகே தாழங்குடா, உப்பளவாடி கிராமங்களுக்கு இடையே உள்ள தரைப்பாலத்தில் பெண்ணை ஆற்று நீர் 4 அடி உயரத்துக்கு ஓடியது. மாலையில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இந்த இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். தாளங்குடா பகுதியில் உப்பனாற்று நீர் கரைபுறண்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்துள்ள இடத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
திருவந்திபுரம் அருகே கெடிலம் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு, உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார், கூடுதல் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
கடலூர் நகரில் சாலைகள் சீர்குலைந்து கிடப்பது குறித்து நகராட்சித் தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுடன் விவாதித்தார். பாதாளச் சாக்கடைக் கடைக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள், மழை காரணமாக உள் வாங்கிய சாலைகள், சேறும் சகதியுமாகக் கிடக்கும் சாலைகள் உடனடியாக சீரமைக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior