உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

பாதுகாப்பு ஏற்பாடு: மின்வாரியம் அறிவிப்பு

சிதம்பரம்,நவ.9:

சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் பருவ மழை காரணமாக பாதுகாப்பு குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அறிவிப்பு விவரம்: மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகே செல்லாமல் மற்றும் தொடாமல் உடனடியாக அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், மின்கம்பிகளிலோ, இழுவை கம்பிகளிலோ ஆடு, மாடுகளை கட்டுவது, கொடி கம்பிகளை கட்டுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும், மின் மாற்றிகளிலோ, மின் கம்பங்களிலோ பொதுமக்கள் அத்துமீறி ஏறக்கூடாது, இடி, மழை மற்றும் மின்னல் காலங்களில் விலை மதிப்புள்ள உயர் ரக மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம், மழை காலங்களில் ஈரமான கைகளுடன் மின் சாதனங்களை தொட வேண்டாம்.
மின்வாரியம் சம்மந்தமாக எந்த ஒரு அவசர தகவல்களையும் 24 மணி நேரமும் கீழ்க்கண்ட பகுதிகளில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்: சிதம்பரம் 222220, 220352, பு.முட்லூர் 247220, சேத்தியாத்தோப்பு 244223, காட்டுமன்னார்கோவில் 262259, திருமுட்டம் 245239, முகந்தெரியான்குப்பம் 291423, பாளையங்கோட்டை 246201.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior