உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

சுனாமி நகரில் மர்ம தீ விபத்து ரூ.15 லட்சம் சுருக்கு வலை சேதம்

கடலூர் :

            நள்ளிரவில் ஏற்பட்ட மர்ம தீ விபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுருக்கு வலை எரிந்து சேதமானது. கடலூர் தேவனாம் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் முத்து, உதயவாணன், வேலு, விக்னேஷ் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்தமான சுருக்கு வலை சுனாமி நகரில் கடந்த இரண்டு நாட்களாக பழுது நீக்கும் பணி நடந்தது.

                       இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின் சுருக்கு வலை வைத்திருந்த கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கொட்டகைக்கு முன் வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுருக்கு வலை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior