உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்

பண்ருட்டி:     

                    தொடங்கப்பட்ட நாள் முதல் இயங்காமல் மூடியுள்ள கீழிருப்பு துணை சுகாதார நிலையத்தில், மருத்துவரையும், மருத்துவ உதவியாளர்களையும் நியமித்து கிராமப்புற மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் கிராம மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் செய்யவுள்ளதாக இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் வெ.பழனிமுருகன் தெரிவித்துள்ளார். 

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  

                              பண்ருட்டி வட்டம் கீழிருப்பு கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் கீழிருப்பில் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாள் முதல் மூடியே உள்ளதால், கிராம மக்கள் சிகிச்சைக்காக பண்ருட்டிக்கு செல்கின்றனர். பிரசவம் பார்பதற்காகவும், அவசரக் கால சிகிச்சைக்காகவும் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் மூடியுள்ளதால், பிரசவம் மற்றும் அவசர உதவி பெற முடியாத நிலை உள்ளதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதிக்காக கட்டப்பட்ட தொட்டி குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மிகுந்த பொருள் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்துக்கு மருத்துவரையும், மருத்துவ உதவியாளரையும் பணியமர்த்தி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.  இல்லை என்றால் அரசின் அலட்சியப் போக்கை கண்டித்து, கிராம மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் வெ.பழனிமுருகன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கீழிருப்பு கிராம சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. பல ஆண்டுகளாக சாலைகள் போடாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் சாலைகள் அமைத்து தரவேண்டும் எனவும் வெ.பழனிமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior