உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கடலூர் :

                     சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கண்டித்தும் சென்னை வக்கீல்களுக்கு ஆதரவாகவும் கடலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணித் தனர்.சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நடந்த போலீஸ் - வக்கீல்கள் மோதல் சம்பவம் தொடர்பாக வக்கீல்கள் மீது சி.பி.ஐ., குற்றப்பத் திரிகை தாக்கல் செய்தது.

                   இதனை கண்டித்து தமிழகத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மற்றும் புதுச் சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் கடலூர் வக்கீல் சங்க தலைவர் லோகநாதன், செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior