உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

சிதம்பரம் அருகே மாருதி வேன் தீப்பிடித்தது வேனில் இருந்தவர்கள் ஓடியதால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை :

                      சிதம்பரம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து மாருதி ஆம்னி வேன் தீப்பிடித்தது. வேனில் இருந்தவர்கள் இறங்கி ஓடியதால் தப்பினர். வடலூர் இ.பி., நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவரின் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள செல்வராஜ் உள்ளிட்ட ஆறு பேர் மாருதி ஆம்னி வேனில் வடலூரில் இருந்து புதுச்சத்திரத்திற்கு புறப்பட்டனர்.

              வயலாமூர் அருகே வரும்போது சாலையில் காயவைத்திருந்த வைக்கோலில் மாருதி ஆம்னி வேன் சிக்கிகொண்டது. அப்போது திடீரென சைலன்சரிலிருந்து தீப்பிடித்து வேன் எரிய தொடங்கியது. உடன் காரில் இருந்த அனைவரும் இறங்கி ஓடினர். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து வேன் எரிந்தது.

                  மேலும் அப்பகுதியில் காய வைத்திருந்த மூன்று ஏக்கர் வைக்கோலும் தீயில் கருகியது. இந்த சம்பவத்தில் வேனிலிருந்தவர்கள் தப்பியோடியதால் உயிர் தப்பினர். தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருந்தும் மாருதி ஆம்னி வேன் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior