உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

வட்டாட்சியர் அலுவலகங்களில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்

கடலூர்:  

                    முதல்வர் கலைஞரின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் பட்டியலில் சேர்க்க, புகைப்படம் எடுக்கும் 2-ம் கட்டப் பணியும் முடிவடைந்து விட்டதால், இனி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் உறுப்பினர் சேர்க்கைப் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                             முதல்வர் கலைஞரின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகள் பட்டியிலில் சேர்க்க, 30-8-2009 முதல் 2-12-2009 வரை புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகைப் பதிவு செய்யும் பணி, முதல் கட்டமாக கிராமங்கள் தோறும் நடைபெற்றது. முதல் கட்டப் பணியின் போது விடுபட்டவர்களுக்கு 2-ம் கட்டமாக இப்பணி 21-12-2009 முதல் 13-1-2010 வரை கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டது. இரு கட்டங்களிலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல், விடுபட்ட தகுதியானவர்களை இத்திட்டத்தில் சேர்க்க, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் குழு ஒன்று 20-1-2010 முதல் 3 மாதங்களுக்குச் செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் சேர 26 நல வாரிய உறுப்பினர்களும், ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குக் கீழ் உள்ள, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தகுதியானவர்கள். அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், இ.எஸ்.ஐ. திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளோர் இத்திட்டத்தில் சேரத் தகுதி அற்றவர்கள்.

                              விடுபட்டவர்கள் இத்திட்டத்தில் சேர வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள வருவோர், ரேஷன் கார்டுடன் நலவாரிய அடையாள அட்டை, நலவாரியங்களில் உறுப்பினர்களாக அல்லாதோர் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட வருமானச் சான்று ஆகியவற்றுடன் வர வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior