உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

அரசு பஸ் பழுதால் பயணிகள் கடும் அவதி மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

திட்டக்குடி :

                       திட்டக்குடி அருகே பழுதான பஸ்சிலிருந்து இறக்கப்பட்ட பயணிகள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூரிலிருந்து நேற்று மதியம் 3.10 மணியளவில் திருச்சி மார்க்கமாக சுமார் 90 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அருகே வந்து கொண்டிருந்த போது, பஸ்சின் பின்புற டயருக்கு மேல்புறம் செல்லும் ஆங்கர் திடீரென பழுதானது. பஸ்சை ஓட்டி வந்த கடலூர் டிரைவர் ராஜாஜி, திட்டக்குடி பஸ் நிலையத்தில் 30 பயணிகளை இறக்கிவிட்டார்.

                         பின்னர் திட்டக்குடி பணிமனைக்கு முன்பாக இறக்கி விடப் பட்ட பயணிகளில் சிலர் நிறுத்தப்பட்ட பஸ்களில் ஏறி சென்றனர். ஆனால் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை வரை செல்வதற்காக குழந்தைகளுடன் நின்றிருந்த பயணிகள் சுமார் 20 பேர் மாற்று பஸ் இல்லாமல் ஒன்னே முக்கால் மணி நேரம் அவதியடைந்தனர்.

                     இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த திட்டக்குடி இன்ஸ் பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற பயணிகளை சமாதானம் செய்து, திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி ஏற்றிவிட்டனர். இந்த சம்பவத்தால் திட்டக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior