உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் முறைகேடு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு

கடலூர் :

                  தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மாவட்டத்தில் உளுந்து உற்பத் தியை அதிகரிக்க அரசு வழங்கிய 80 கோடி மானியம் வழங்கப்படவில்லை என குறைகேட்பு கூட்டத் தில் விவசாயிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

                  மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணி, நபார்டு வங்கி பொதுமேலாளர் ராஜகோபால் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

                      கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் பேசுகையில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மாவட்டத்தில் உளுந்து உற்பத்தியை அதிகரிக்க அரசு மானியம் வழங்கி வருகிறது. அதில் முதல் இரண்டு கட்டமாக 30 கோடி ரூபாயும், இந் தாண்டிற்கு 50 கோடி வழங் கியுள்ளது. இந்த மானியம் விவசாயிகளை சென்றடைய வில்லை.

                 உளுந்து விதைக்க போதிய விதை உளுந்து மற்றும் அதற்கான மானியம், அறுவடைக்கு பின் விவசாயிகளிடமிருந்து விதைக்காக பெறப்படும் உளுந்துக்கு வழங்க வேண் டிய மானியமும் வழங்கவில்லை. அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறி முறைகேடு நடந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை பல விவசாயிகள் ஆமோதித்ததால் திடீர் பரபரப்பு ஏற் பட்டது.

                        தொடர்ந்து பேசிய ரவீந்திரன், மாவட்டத்தில் வெள்ளச்சேதங்களை கட்டுப்படுத்த "மாஸ்டர் பிளான்' தயாரித்த பின்னர் மாவட்ட விவசாயிகள் மற் றும் பொதுமக்களின் கருத் துக்களை கேட்டறிந்த பின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

                   பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்க ரவீந்திரன் பேசுகையில், மாவட்டத்தில் 30 ஆண்டிற்கு மேலாக பயன்படுத்தப் பட்டு வரும் மின் மோட் டார்களை, மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு அரசு பழைய மின்மோட்டார்களை மாற்ற 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவித்தது. அதில் நமது மாவட்டத்திற்கு 250 மோட்டார்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்திற்கு 850 வழங்கப்பட்டுள்ளது.

                       மானியத்தில் வழங்க இரு மாவட்டத்திற்கும் 40 அறுவடை இயந்திரத்தில் 10 மட்டுமே கடலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்திலும் கடலூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.தேசிய வேலை உறுதித் திட்டத்தை கண்காணிக்க சமுதாய பணிக்குழு நியமிக்க உத்தரவிடப்பட் டுள்ளது. இதில் அந்த பகுதி விவசாயிகளை சேர்க்க வேண்டும் என்றார்.

                    விவசாயி இளங்கீரன் பேசும்போது, சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் அதிகளவு தண்ணீர் தேக்கியதால் வீராணம் பகுதியில் உள்ள 12 கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலத்தில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும்10 நாட்களில் அறுவடைமுடிந்துவிடும் அதற்குபின் தண்ணீரை தேக்கிக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார்.

                      இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தெலுங்கானா பிரச்னை காரணமாக சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது வீராணம் தண்ணீர் மட்டுமே. எனவே விவசாயிகள் விரைவில் அறுவடையை முடித்துக் கொள்ளவேண்டும் என கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய டி.ஆர்.ஓ., நடராஜன், விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் படிப்படியாக தண்ணீரை தேக்கவேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior