உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

கிளேடிஒலஸ் மலர் விற்பனை

சிதம்பரம்:

               சிதம்பரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட வட மாநில வண்ண மலரான கிளேடிஓலஸ் மலர் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் மற்றும் ஜம்மு மாநில தோட்டக்கலைத்துறை விஞ்ஞானி மனோஜ்நாசர் ஆகியோரால் இம்மலர் அறிமுகப்படுத்தப்பட்டு சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் கிராமத்தில் 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சி.முட்லூர் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களில் வெற்றிகரமாக சாகுபடி செய்யப்பட்டு அதிகளவில் கிளேடிஒலஸ் பல வண்ணங்களில் பூக்கத் தொடங்கி உள்ளது. கிளேடிஒலஸ் வண்ண மலர்களின் விற்பனை தொடக்க விழா சிதம்பரம் தெற்குவீதி ஏசியன் வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தொடங்கி வைத்தார். சி.முட்லூர் கிளேடிஒலஸ் சாகுபடி செய்துள்ள முன்னோடி விவசாயிகள் சீனுவாசப்பெருமாள், பானுசந்தர், அருள் உள்ளிட்டோர் வேளாண் அனுபவங்களை விளக்கி கூறினர். ÷விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior