உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

துப்பாக்கி உரிமம் புதுப்பிக்க மாஜி நீதிபதி அலைக்கழிப்பு

சிதம்பரம் :

                      கைத்துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்க, ஓராண்டுக்கு மேலாக அலைகழிக்கப் பட்டு வருகிறார் சிதம்பரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி. சிதம்பரம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மணி. கிருஷ்ணகிரியில் 2005ம் ஆண்டு முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

                  இவர் கடந்த 92ம் ஆண்டு, விழுப்புரத்தில் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்தபோது இலங் கைத் தமிழர் ஒருவர் நள்ளிரவில் அவரது பங்களாவிற்கு வந்து, தான் ஒரு கன்றுகுட்டியை கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்ததால், போலீசாரை வரவழைத்து அவரை அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தார்.

                        நள்ளிரவில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து, மாஜிஸ்திரேட் மணிக்கு அப்போதைய விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., ஜெகதீசன், துப்பாக்கி உரிமம் பெற்று தந்தார். அது முதல் பாதுகாப்பு கருதி கைத்துப்பாக்கியை பயன்படுத்தி வரும் நீதிபதி மணி, முறைப்படி மூன்றுஆண்டிற்கு ஒருமுறை துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து வந்துள்ளார்.

                 இறுதியாக கிருஷ்ணகிரியில் 2005ம் ஆண்டு புதுப்பித்தார்.பணி ஓய்வு பெற்றபின், தற்போது சிதம்பரத்தில் வசித்து வரும் அவர், கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரக் கோரி சிதம்பரம் ஆர்.டி. ஓ.,விடம் விண் ணப்பித்தார். 10 மாதங்களுக்கு பிறகு அப்போதைய ஆர்.டி.ஓ., ராமலிங்கம், தாசில்தார் தனவந்தகிருஷ்ணன் ஆகியோர், நீதிபதி வீட்டிற்கு சென்று விசாரித்துவிட்டு உரிமம் வழங்கலாம் என, மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.

              ஆனால் ஓராண்டிற்கு மேலாகியும் உரிமம் புதுப்பித்து தரவில்லை. அவர் நீதிபதியாக இருந்தபோது, வீடு தேடிச் சென்று உரிமத்தை புதுப்பித்து தந்த அதிகாரிகள், அவர் ஓய்வு பெற்ற பின் அலைக்கழித்து வருவது வேதனையான விஷயம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior