உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

ஆதிதிராவிடர் பகுதி கோயில்களை புனரமைக்க தலா ரூ.25 ஆயிரம் நிதி

கடலூர்:  

                     கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 30 கோயில்களைப் புனரமைக்க, தலா ரூ. 25 ஆயிரத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினார். இத் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 30 கோயில்களுக்குத் தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.  நிகழ்ச்சியில், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கரசு, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ஆர்.ஜெகன்னாதன், திருவந்திபுரம் தேவனாத சுவாமி கோயில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், கோயில் ஆய்வாளர்கள் தேவராஜ், நாகராஜன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior