உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

காடாம்புலியூர் ஊராட்சி எழுத்தர் கைது

பண்ருட்டி:

                     வீடு ஒதுக்கி கொடுத்ததற்கு பணம் தரவில்லை என சமத்துவபுரம் பயனாளி பழனிவேல்முருகனை தாக்கிய ஊராட்சி எழுத்தர் முருகனை காடாம்புலியூர் போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அருகே பெரியார் சமத்துவபுரம் அண்மையில் திறக்கப்பட்டது.​  இதில் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிவேல்முருகன் சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார்.  இவரிடம் ஊராட்சி எழுத்தர் முருகன் வீடு ஒதுக்கி கொடுத்ததற்காக லஞ்சமாக பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பலமுறை கேட்டும் பணம் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி எழுத்தர் முருகன்,​​ சமத்துவபுரம் பயனாளி பழனிவேல்முருகனை தாக்கியுள்ளார்.இது தொடர்பான புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸôர் ஊராட்சி எழுத்தர் முருகனை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior