உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

பரங்கிப்பேட்டை:

                     பரங்கிப்பேட்டையில் இருந்து அகரம் ரயிலடி வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பரங்கிப்பேட்டையில் இருந்து அகரம் ரயிலடி வரை நெடுஞ்சாலை துறை சாலை மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இங்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

                  இதனால்  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சஞ்சீவிராயர் கோவில் தெரு, சின்னக் கடை, பெரியத்தெரு, சலங்குக்கார தெரு ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அதிகரித்து வருகின்றனர். இந்த இடங்களில் எதிர், எதிரே இரண்டு வாகனங்கள் வந்து விட்டால்  போதும் ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  அவசரமாக செல்பவர்கள் போக்குவரத்து  நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.  இதனால் பரங்கிப்பேட்டையில் இருந்து அகரம் ரயிலடி வரை  சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior