உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதையில் அனைத்து ரயில்களையும் இயக்க கோரிக்கை

கடலூர்:
 
                 விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில், ஏற்கெனவே மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் வெள்ளிக்கிழமை தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: 
 
             விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு, ஏப்ரல் 15-ம் தேதி முதல் இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட இருப்பதாக அறிகிறோம். இந்த மார்க்கத்தில் சென்னையில் இருந்து கடலூர் வழியாக, 12 ரயில்கள் இயக்கப் பட்டன. தற்போது, இப்பாதையில் இரு பாசஞ்சர் ரயில்களும் (விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மட்டும்) மற்றும் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாரம் ஒரு முறை மட்டும் இயக்க, தென்னக ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக அறிகிறோம். 
 
                      இது கடலூர் மாவட்ட மக்களுக்கு பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாகும். எனவே மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கும், கடலூரில் இருந்து கோவை மற்றும் வேலூருக் கும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் நிற்கும் என்ற அறிவிப்பு கண்டனத்துக்கு உரியது. சரித்திர முக்கியத்துவம் கருதி, கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தை மாதிரி ரயில் நிலையமாக மேம்படுத்த வேண்டும். கணினி பதிவு மையம் காலை 8 மணி முதல் 14 மணி நேரம் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு லாரன்ஸ் சாலை முதல், கம்மியம்பேட்டை ரயில்வே கேட் வரை, ரயில்வே லைன் ஓரமாக அகல நடைபாதை அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior