உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

சமூக விரோதிகள் ஊடுருவல் எதிரொலி : நெய்வேலியில் பலத்த பாதுகாப்பு

நெய்வேலி: 

                நெய்வேலி நகரில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

                   நெய்வேலி நகர எல்லைக்குள் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர். இதன் எதிரொலியாக டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். நடைப்பயிற்சி செல்லும் பெண்கள் துணையுடன் செல்ல வேண்டும். அதிக நகை அணிய வேண்டாம். இரவு நேர நடை பயிற் சியை தவிர்க்கவும். இரவில் காற்றுக்காக ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம். வெளியூர் செல்லும் போதும், வீட்டை பூட்டி விட்டு காவல் துறைக்கு தெரியப் படுத்தவும். வங்கிகளில் உள்ள பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்தவும். தொடர்புக்கு டி.எஸ்.பி., 94454 90340 இன்ஸ்பெக்டர் 94434 90337 நகர காவல்நிலையம் 04142-252051 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த ஒருவாரமாக நெய்வேலி நகரில் மக்கள் அதிகளவில் நடமாடும் இடங்கள் மட் டுமின்றி, ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior