உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு தாக்கு: 12 பேர் கைது

 கடலூர் : 

               முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு மற்றும் காரை தாக்கி சேதப்படுத்திய வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் செல்லங்குப்பம் மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வேலாயுதபாண்டியன். தேங்காய் மண்டி உரிமையாளரான இவர் கடந்த 6ம் தேதி கடலூர் முதுநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., சென்டரில் பணம் எடுத்தபோது, செல்லங்குப்பம் காலனியைச் சேர்ந்த சேதுராமன், சுமன், ராஜா உள்ளிட்டோர் பணம் கேட்டு தகராறு செய்தனர்.

                    இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் இரவு வேலாயுத பாண்டியன் வீட்டையும், அங்கு நின்றிருந்த "இநோவா' காரை அடித்து நொறுக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் மதியம் சுமன் உட்பட 12 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து தலைமறைவாக உள்ள சேதுராமன், ராஜாவை தேடிவருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தில் தொடர்பில்லாதவர்களை கைது செய்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்க கோரி செல்லங்குப்பம் காலனி மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலின் பேரில் டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior